Skip to main content

Featured

சாய்பாபா அஷ்டோத்திரம்

  சாய்பாபா அஷ்டோத்திரசத நமாவளி 1. ஓம் ஸ்ரீ சாயி நாதாய நம: 2.ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணாய நம: 3.ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: 4.ஓம் சேஷ சாயினே நம: 5.ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: 6.ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: 7.ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம: 8.ஓம் பூதாவாஸாய நம: 9.ஓம் பூத பவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம: 10.ஓம் காலாதீதாய நம: 11.ஓம் காலாய நம: 12.ஓம் காலகாலாய நம: 13.ஓம் காலதர்பதமனாய நம: 14.ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம: 15.ஓம் அமர்த்யாய நம: 16.ஓம் மர்த்யாபயப்ரதாய நம: 17.ஓம் ஜீவாதாராய நம: 18.ஓம் ஸர்வாதாராய நம: 19.ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம: 20.ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம: 21.ஓம் அன்னவஸ்த்ரதாய நம: 22.ஓம் ஆரோக்யஷேமதாய நம: 23.ஓம் தனமாங்கல்யப்ரதாய நம: 24.ஓம் ருத்திஸித்திதாய நம: 25.ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம: 26.ஓம் யோகஷேமவஹாய நம: 27.ஓம் ஆபத்பாந்தவாய நம: 28.ஓம் மார்க்கபந்தவே நம: 29.ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம 30.ஓம் ப்ரியாய நம: 31.ஓம் ப்ரீதிவர்தனாய நம: 32.ஓம் அந்தர்யாமினே நம: 33.ஓம் ஸச்சிதாத்மனே நம: 34.ஓம் ஆனந்தாய நம: 35.ஓம் ஆனந்ததாய நம: 36.ஓம் பரமேச்வராய நம: 37.ஓம் பரப்ரம்ஹணே நம: 38.ஓம் பர...

திருநீற்று பதிகம்

p> 

   நம் உடலில் உள்ள நோய்களை நீக்கும் திருநீறு பதிகம்


கூன் பாண்டிய மன்னனின் வெப்ப நோயை தீர்க்க திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்று பதிகம் மிகுந்த சக்தி பெற்றுள்ளது! உஷ்ணத்தால் வரக்கூடிய வெப்ப நோய்கள், அம்மை, காய்ச்சல் போன்ற விஷயங்களை எளிதாக தீர்க்க கூடிய இப்பாடல் சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். எவ்விதமான நோய்களாக இருந்தாலும் இந்த பதிகத்தை பாடும் பொழுது சிவபெருமானே நம் நோய் தீர்க்கும் மருந்தாக மாறிவிடுவார் என்பது நம்பிக்கை. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இப்பாடலை தினந்தோறும் காலை, மாலையில் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு பாடினால் பயன் பெறலாமே!

thirunavukkarasar

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே!



வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே!

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறுசத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு

பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே!


காண இனியது நீறு கவினைத் தருவது நீறுபேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறுமாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறுசேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே!

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே!

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே!

sivan

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே!

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே!

sivan-temple

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே!

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே!

sivan-god2

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!

Comments